எந்த வயதிற்க்கும்
ஜுரணமாகாத
அஜுரணமே
மரணமே
உனக்கு மனமில்லையா ? ? ?
பிறப்பென்றால்
இறப்பும் உண்டென்ற
நியதி அறிவோம்
ஆனால் உனக்கு
நியாயமான நியதி
இல்லையா ? ? ?
பாசம் என்ற
வலையில்
மனிதனைப் பின்னியது
ஏன் ? ? ?
தாய் தந்தை குழந்தை
என்ற கோயிலை
அறிவாயா ? ? ?
இறைவா
படைப்பின் பரம்பொருளே - எம்
உருவங்களை
உருமாற்றினாய்
ஆயுள் ரேகைகளையாவது
ஒன்றாய் வைத்திருக்கலாமே ? ? ?
கடமை கண்கண்ட தெய்வம் - உன்
கடமையாற்றுமுன் - உன்
வசம் வருவோரின்
கடமையை எண்ணிணாயா ? ? ?
பாசக் கயிற்றால்
பாசத்தை அழவைத்து
பார்க்க உன்னால்
எப்படியடா முடிந்தது ? ? ?
உனை மலர்
கொடுத்து வரவேற்கும்
நொடியில் - உன்
வருகை அமைந்திருந்தால்
பல உள்ளங்களில்
உனக்கும் கோயில்கள்
உருவாகலாம் . . .
நீ ஜெயித்து விட்டதாய்
ஒருபொழுதும் எண்ணாதே
உன்னிலும் உயர்ந்த சக்தி
எம் நினைவுகளென்று தெரியாதோ ? ? ?
உடலையும் உயிரையும் - உன்
வசம் கொண்டாலும்
நினைவுக்கு நாள் குறிப்பாயா ? ? ?
ஆம் - என்றால்
வாகைமலரை
நான் சூடுகிறேன் . . .
மனமில்லா
மரணமே நீ நிஜமில்லை...