Friday, November 14, 2008

மரணமே நீ நிஜமில்லை...


எந்த வயதிற்க்கும்

ஜுரணமாகாத

அஜுரணமே

மரணமே

உனக்கு மனமில்லையா ? ? ?

பிறப்பென்றால்

இறப்பும் உண்டென்ற

நியதி அறிவோம்

ஆனால் உனக்கு

நியாயமான நியதி

இல்லையா ? ? ?

பாசம் என்ற

வலையில்

மனிதனைப் பின்னியது

ஏன் ? ? ?

தாய் தந்தை குழந்தை

என்ற கோயிலை

அறிவாயா ? ? ?

இறைவா

படைப்பின் பரம்பொருளே - எம்

உருவங்களை

உருமாற்றினாய்

ஆயுள் ரேகைகளையாவது

ஒன்றாய் வைத்திருக்கலாமே ? ? ?

கடமை கண்கண்ட தெய்வம் - உன்

கடமையாற்றுமுன் - உன்

வசம் வருவோரின்

கடமையை எண்ணிணாயா ? ? ?

பாசக் கயிற்றால்

பாசத்தை அழவைத்து

பார்க்க உன்னால்

எப்படியடா முடிந்தது ? ? ?

உனை மலர்

கொடுத்து வரவேற்கும்

நொடியில் - உன்

வருகை அமைந்திருந்தால்

பல உள்ளங்களில்

உனக்கும் கோயில்கள்

உருவாகலாம் . . .

நீ ஜெயித்து விட்டதாய்

ஒருபொழுதும் எண்ணாதே

உன்னிலும் உயர்ந்த சக்தி

எம் நினைவுகளென்று தெரியாதோ ? ? ?

உடலையும் உயிரையும் - உன்

வசம் கொண்டாலும்

நினைவுக்கு நாள் குறிப்பாயா ? ? ?

ஆம் - என்றால்

வாகைமலரை

நான் சூடுகிறேன் . . .

மனமில்லா

மரணமே நீ நிஜமில்லை...