Tuesday, April 22, 2008
புதுக்(க)விதை
எதுகை,மோனை,யாப்பை
நினைந்து
அறைக்குள் அடங்கி
இருளில் துயின்றவனைத்
தட்டி எழுப்பிய
கொட்டுமுரசு
தமிழுக்கும்
வாழ்வியலுக்கும்
புதுப்பரிணாமம் . . .
பளிச்சிடும் கருத்துமின்னல்
சிந்தனைத்துளிகளின் பெருமழை...
சொற்சித்திரங்களின்
சுந்தரச்சோலை
பசி வந்த கிளிகளெல்லாம்
பறந்து வரும்
சுதந்திரச்சோலை...
கன்னித்தமிழுக்கு எழில்
மானிடப்பண்புகளுக்கு
கருத்தாழமிக்க உரம்
சிந்தனைகளின் பிம்பம்
இதயத்துடிப்பின் மருந்துச்சீட்டு
இதய உணர்வுகளை
வாழ்க்கை நிகழ்வுகளை
உணர்ச்சி பொங்கக் கூறிடும்
எரிமலை...
பனிமலை...
மனிதனே,
நான் - உன்
வானவில் எண்ணங்களுக்கு
வண்ணம் பூசிடும்
மாயாஜால மந்திரவாதி
தன்னம்பிக்கையின்
இயங்குசக்தி
மக்கள் விழிப்புணர்வுக்கு
முதல் முகவரி...
சிப்பிகளில்லா முத்து
என்,
கருத்துக் களஞ்சியம்
தேசிய விருதுக்கும் வழிகாட்டி...
என் வளர்ச்சி
ஹைகூவின் பிறப்பு
நெற்றிக்கு திலகம்
வில்லுக்கு விசயன்
சொல்லுக்கு அநுமன்
பாட்டுக்குப்புதுக்கவிதை
நான்
புதுக்கவிதை
புது(க)விதை
வழிகாட்டி . . .
புது கவிதாயினி
வண்ணம்தீட்டி
பிரசவித்தாள்
பிரபலங்கள் பார்த்தால்
புத்தகமும் பிரபலமாகும்...
பிரசவித்தும்
அவளுக்குள் பிரசவ வலி
வலிக்கு நிவாரணம்
வாசகரே - உம்
வாசகங்கள்தான்...
உம் கண்கள்
எம் படைப்பு
நோக்கினால்
விடியல் பிறக்கும்...
உம்
எண்ணங்கள் வாசகங்கள்...
எனும்
நடைவண்டி பற்றி
நடைபயில காத்திருக்கிறாள் ...
புதியதை வரவேற்றுப்பார்
புத்துலகம் படைக்கலாம்
புதுகவிதாயினிகளையும்
வளரவிடுங்கள்
நாளைய நோபல் பரிசுக்குரிய
கவிதைகளை இழந்துவிடாதீர்கள்...
கவிதை
ஒரு பஞ்சாங்கம்
நாளைய உலகை
கணித்து காட்டும் பஞ்சாங்கம்...
Thursday, April 17, 2008
தண்ணீர்த் தாண்டவம்
சிவ சிவ உன் கோபம்
ருத்ரதாண்டவம்
பூமித்தாய்க்கு
பூகம்பம்
அக்னி தேவனால் கும்பகோணம்
துன்பகோனம்...
என் அழகிய அலைமகளும்
பெயர்சூட்டிக் கொண்டாள் சுனாமி...என்று
கடல் அன்னையே
அலைமகளே - உன்
மெல்லிய இசை கேட்ட
இடங்களில் உன்
குழந்தைகளின் அழுகுரல்
உப்பிட்டு வளர்த்தவளே
உயிர்குடிக்க
நினைத்தது
நியாயமா ? ? ?
அலைமகளே - உனை
தோழனென்றவனை
ஏமாற்றியது
எவ்வகை ? ? ?
புத்தாண்டை சோகமாக்கியவளே
பேராழியே !
பேரழிவை தந்தவளே
உன்னால் மகிழ்த்த வந்த
பண்டிகைகளெல்லாம்
துன்பமானதே...
உன் கரையோர
மணலின் ஈரம் - உன்
நெஞ்சில் இல்லையா ? ? ?
பற்பல பொருள்
தந்தவளே அதற்கு
விலை
எம் மானுடர் உயிரோ ? ? ?
கவலை மறந்து
உனை இரசித்தவனை
ருசிக்க நினைத்தது
நியாயமா ? ? ?
கரையை மட்டும்
தழுவியவளே
மனிதஉயிரைத்தழுவியது ஏன் ? ? ?
இலட்சியங்களை
பகிரவந்த நண்பனையும்
அன்னை மடியென
ஆடிய குழந்தைகளையும்
உன் கோரப்பசிக்கு
இரையாக்கினாயே !
ஊருக்கு ஒரு இடுகாடு
உன் தாண்டவத்தால்
ஊரே இடுகாடு...
எத்தனை யுகங்கள் காத்திருந்தாய் தாயே.? ? ?
உன்னில்
உவர்ப்பு தன்மை
குறைந்ததென்றெண்ணி
எம் கண்ணீரின் உவர்ப்பைப்பெற
இத்தாண்டவமா ? ? ?
இல்லை
அன்னையே என்றழைத்த
குழந்தையை வாரி அணைத்திட
நினைத்த பாசத்தின்
உச்ச நிலையா ? ??
உன் பேரலையை
எம் பேரிழப்பைப்
பார்த்த கண்கள் சொரிந்த
கண்ணீரின் ஆழம்
ஆழியே ...
உன் ஆழத்தினும் அதிகம்
அன்னையே - உன்
பசியாற்றிய
குழந்தைகளுக்காக
இனி வாழும்
குழந்தைகைள
வாழவிடு தாயே
வாழவிடு
Wednesday, April 16, 2008
விடையின்றி வினா
நான் செல்லும்
வழிகளில் - என்
விழிகள் உனை
மட்டும் தேடுவது
ஏன் ? ? ?
எண்ணற்றவரோடு உரையாடுகிறேன்
உன் வார்த்தைகளுக்கு
மட்டும்
அர்த்தம் தேடுவது
ஏன் ? ? ?
உன் அருகாமையில்
வந்த நினைவுகளினும்
உன் பிரிவில்
அதன் எண்ணிக்கை உயர்ந்தது
ஏன் ? ? ?
விரும்புகிறேன் என்றவனின்
காதலை ஏற்கத் தயங்கிய
இதயம்
ஏன்...
காதலை சொல்லத் தயங்கிய
உனை நினைந்து
உருகுகிறது ? ? ?
பிரிவென்ற சொல்லுக்கு
பன்முறை செவிசாய்த்தருந்தும் - உன்
பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை
ஏன் ? ? ?
இளைய தலைமுறையே திரண்டு வா...
கன்னியருக்கும்
கண்ணன்களுக்கும்
ஏவுகணை செலுத்தி ஓய்ந்த
இளையதலைமுறையே...
வலுவிழந்த - உன்
பாரதத்தை
வலுவூட்ட . . .
இளையதலைமுறையே இணைந்து வா...
மின்மினி பூச்சிகளின்
மின்னல் வெளிச்சம்
நிலாப்பெண் வருகை
பதிவாகவில்லை...
ஆனால் ,
பௌர்ணமியாய் பிரகாசித்த ஓர் இடம்
அருகில் சென்றேன்
பாரத அன்னையைக்கண்டேன்...
சற்றே மெய் சிலிர்த்துப்போனேன்...
தாமரையாம்
அவள் கரங்களில்
வீரப்பால் . . .
விண்மீன்களாம்
அவள் விழிகளில்
ஏக்கம்...
அவள் காத்திருப்பது
அஹிம்சாவாதி காந்தி...
வீரமகள் ஜான்ஸிராணி...
குருதிகொட்டிய கட்டபொம்மனுக்காக
அல்ல...
அன்னையவள்
காத்திருப்பு
காக்கப்போகும்
இளையதலைமுறையே ...
உனக்காக...
பாரத வீதியில்
பாலும்
தேனும்
ஓடிட
ஒற்றுமை மலர்கள்
புன்னகைத்திட
இளையதலைமுறையே விரைந்து வா...
அன்னையவள் கண்ட கனவு
நெனவாக
இளையதலைமுறையே திரண்டு வா...
ஏந்திழையே...
பண்பெனும் புத்தகமே
பிரம்மன் தீட்டிய எழிலோவியமே...
நெருப்பின் காம்பில்
பூக்கள் பூத்திட
ஏந்திழையே
எழுந்திடு...
கைவளை விரலிடுக்கில்
சாதம் படைத்தது போதும்
சாதனை படைத்திடு...
இருளை அகற்ற
விவாதித்தது போதும்
விளக்கேற்று...
வஞ்சக வலையில்
கயல் சிக்கலாம்
கயல்விழியை ஒப்பவளே
நீயுமா ? ? ?
சரித்திரம் படைக்க
வந்தவளே
தரித்திரம் ஆகிவிடாதே...
தடைகளை தகர்த்தெறி ...
உனக்குள் இப்பிரபஞ்சத்தை
விதைத்துக்கொள்...
பிரபஞ்சத்தின்
கருவறையே...
நீ இல்லையேல் இப்பிரபஞ்சம் இல்லை.....
Tuesday, April 15, 2008
பிரிவு நிரந்தரமல்ல
பிரிய மனமின்றி
மூன்றெழுத்து
மூன்றெழுத்தை
உனக்குள் வை . . .
அமைதி என்ற மூன்றெழுத்து
உனக்கே உனக்கு...
தோல்வி என்ற
மூன்றெழுத்தை
தாங்கிப்பார்...
வெற்றி என்ற
மூன்றெழுத்து விரைந்திடும் . . .
காதல் என்ற
மூன்றெழுத்தில்
கலந்து
கல்வி என்ற
மூன்றெழுத்தை
மறவாமலிரு . . .
இத்தனையும் செய்துபார்
வெற்றி என்ற மூன்றெழுத்திற்கும்
மகிழ்ச்சி என்ற ஐந்தெழுத்திற்கும்
மத்தியில் - உன்
"வாழ்க்கை" என்ற நானகெழுத்து மணம் வீசிடும்...
நட்பா ? காதலா ?
ஸ்நேகத்தில் . . .
இரசித்தனர்
ஒற்றுமையை
நாம் வளர்ந்தோம்
நம் நட்பும்...
அதற்குத்
தடையும்...
நண்பன் என்றேன்
நட்பாய் பழகுவதும்
காதலாய் கனிவதும்
இயல்பே ,
உரைத்தது சமூகம்
என் மனமோ
முரண்பட்டது - உனை
வினவினேன்
நீயோ
இருதலைக்கொள்ளியாய்
என் முன்...
மௌனம் கலைந்திடு
நட்பெனும் புனிதத்தோடு
காதலெனும் தூய்மையை
இணைத்து கொச்சப்படுத்தாமலிருக்க
நட்பா ? காதலா ?
முடிவெடு
சா(தி)தீ
சாதிகள் இல்லையடி பாப்பா - ஆனால்
ஏட்டைப் படிக்க
சா(தி)தீச்சான்றிதழ் . . .
மானிட வாழ்வின்
அணையா தீ சா(தி)தீ
இறையின் படைப்புகளே
அன்பென்ற பாலை ருசித்து
சுவை மாறும் முன்
பாலூற்ற நினைப்பது
எவ்வகை ? ? ?
சா(தி)தீயை அணைத்திட
உருவெடுத்த இயந்திரங்களே...
இளையதலைமுறைகளே . . .
தீயணைப்பு இயந்திரமாக
மாறுவது என்று ? ? ?
புதிதாய் பிறந்தோம் . . .
துயில் கொண்டு
வையகம் கண்ட நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...
அன்னை தந்தை
அறிந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...
நட்பின் மகத்துவம்
காதலின் இலக்கணம்
அறிந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...
புறஅழகை வெறுத்து
அகஅழகை
உணர்ந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...
ஒவ்வொரு நாளும்
நொடியும் புதிதாய் பிறந்தோம்...
உன் ஆழ்சொப்பனமும்
உனக்கு ஓர் புதிய ஜனனமே . . .
காதல் பெரிதா?
உனைச்சுமந்து - தன்
உதிரத்தை உணவாக்கிய
அன்னையினும் உன்னவளின்
காதல்பெரிதா ? ? ?
உன்னவளை நினைந்து
உருகி வடிக்கும் - கவிதையின்
ஒவ்வொரு துளி மையிலும் - உன்
தந்தையின் . . .
உதிரம் தெரியவில்லையா ?
உன் காலணியின்
விலையோ 1000 - உன்
தந்தையின் காலணியிலோ
1000 தையல்...
இவைகள் கண்டும்
கற்கும் வயதில்
உன் மனதில்
காதல் மலர்கிறதா ? ? ?
காதல் பெரிதா ? ? ?
கருகும் மொட்டுகள்
உலகின் ஒளியே
ஞாயிறே
உனைக் காணாத விழிகளும்
இப்புவியில் உண்டோ ?
உன் வருகைக்கு முன்
அவர்கள் வருகை
பதிவானால் மட்டுமே
உண்ண உணவு...
சிறார் தொழிலாளர் ஒழிப்பு
நூலின் தலைப்பு
நுலை கையிலேந்தி
விலை கூவுகிறான்
10 வயது சிறுவன் . . .
சந்திரன் வருகை
அவர்களுக்கு ஆனந்தம்
நிலாச்சோறுக்கு அல்ல
இல்லம்தனில் தடம் பதிப்பதற்கு..
புத்தக சுமை
தூக்கி சுகம் காண
ஏங்கும் தோள்கள்..
எத்தனை எத்தனை? ? ?
எத்தனை கனவுகள் ?
அத்தனையும் காற்றோடு போக
அக்னிக்குஞ்சுகள்
அக்னி குண்டங்களில்
எழுதுகோல் பற்ற வேண்டிய பிஞ்சு விரல்கள்
கந்தகச் சாலையில்...
பிஞ்சு நெஞ்சங்களின
குமுறல்கள் - உங்கள்
நெஞ்சங்களை எட்டவில்லையா ?
1000 1000 சிறார்களின்
கதறல்கள் உங்கள்
செவிகளை பிளக்கவில்லையா ?
நாட்டின் செல்வங்களை
முத்துக்களை
காத்திட விரைந்திடுவீர் இன்றே...
அறிவியல் காற்றின் ஆயுளே...
உமக்கு
சோதனையிலும்
கருவறையின் உயிரே...
யுகங்கள் பல கடந்தாலும் உனை உயிர்த்தவளே...
கருப்பையில் சுமந்தவளே...
**ஈரைந்து மாதம்
வயிற்றில் சுமந்தாய்...
**ஆயுள் முழுவதும்
இதயத்தில் சுமக்கிறாய் - உன்
உதிரத்தை எனக்கு
உணவாக்கினாய்...
**கண்களால் காணும் தெய்வமே...
உன் அன்பிற்கு அளவுகோலா ?
படைப்பின் பரம்பொருளாம்
பிரம்மனுக்கும்
படைக்க முடியா கருவி...
**உனக்கும் எனக்கும்
ஆயுள்ரேகை ஒன்றாகாதோ ?
**ஈரேழு ஜென்மம்
தரித்தாலும் - உனக்கே
மகளாக மாட்டேனோ???
Monday, April 14, 2008
இதயமொழி
என் இதழ்கள் மௌனமானால் என்ன ?
எனை நேசிக்க தெரிந்த
உனக்கு.....
உன்னையே சுவாசித்த என்
இதயத்தின் இதயமொழி....
புரியவில்லையா? ? ?
காதல்
காதல்
புனிதமானது..
நீ புனிதத்தோடு வாழும்வரை...
ஆழமானது
நீ அன்போடு இருக்கும்வரை..
புரியாதபுதிர்
பக்குவம்பெரும்வரை...
எந்த ராகம்?
மழை அடிமை...
மகுடியின் ராகத்திற்கு
பாம்பு அடிமை...
ஆனால்...
எந்த ராகத்திற்கடா
வன்முறை அடிமை?

