இறைவா
சந்திக்க வைத்தாய்
சந்தோஷமாய்
நாட்கள் ஓடின...
ஒவ்வொரு நாளும்
பிரிவின் வருகை
என்றறியாமல் . . .
நினைவுகளோடு
பிரிய மனமின்றி
பிரிய மனமின்றி
பிரிவை
சந்தித்தோம்
விழிகளால் சந்தித்து
இதழ்களால் உறவாடும்
பயணம் இனி இல்லை...
பயணம்
நிதம் நிதம் தொடரும் . . .
ஓயாமல் சுற்றும்
பூமியில்
நாமும் சுற்றுவோம்
மானிடத்தேனீயாய்
உழைப்பால் உயர்வோம்
சாதனைகள் படைப்போம்
மீண்டும் சந்திப்போம் - என்ற
விதைவிதைத்து
நம்பிக்கையோடு
விடைபெறுவோம்...
பிரிவு நிரந்தரமல்ல...
