Tuesday, April 15, 2008

காதல் பெரிதா?

ஈரைந்து மாதம்
உனைச்சுமந்து - தன்
உதிரத்தை உணவாக்கிய
அன்னையினும் உன்னவளின்
காதல்பெரிதா ? ? ?
உன்னவளை நினைந்து
உருகி வடிக்கும் - கவிதையின்
ஒவ்வொரு துளி மையிலும் - உன்
தந்தையின் . . .
உதிரம் தெரியவில்லையா ?
உன் காலணியின்
விலையோ 1000 - உன்
தந்தையின் காலணியிலோ
1000 தையல்...
இவைகள் கண்டும்
கற்கும் வயதில்
உன் மனதில்
காதல் மலர்கிறதா ? ? ?
காதல் பெரிதா ? ? ?