தன் எண்ணங்களுக்கு
வண்ணம்தீட்டி
பிரசவித்தாள்
பிரபலங்கள் பார்த்தால்
புத்தகமும் பிரபலமாகும்...
பிரசவித்தும்
அவளுக்குள் பிரசவ வலி
வலிக்கு நிவாரணம்
வாசகரே - உம்
வாசகங்கள்தான்...
உம் கண்கள்
எம் படைப்பு
நோக்கினால்
விடியல் பிறக்கும்...
உம்
எண்ணங்கள் வாசகங்கள்...
எனும்
நடைவண்டி பற்றி
நடைபயில காத்திருக்கிறாள் ...
புதியதை வரவேற்றுப்பார்
புத்துலகம் படைக்கலாம்
புதுகவிதாயினிகளையும்
வளரவிடுங்கள்
நாளைய நோபல் பரிசுக்குரிய
கவிதைகளை இழந்துவிடாதீர்கள்...
கவிதை
ஒரு பஞ்சாங்கம்
நாளைய உலகை
கணித்து காட்டும் பஞ்சாங்கம்...