Tuesday, April 15, 2008

உயிர்த்தவளே...

**கருவறையாம்

கருப்பையில் சுமந்தவளே...

**ஈரைந்து மாதம்

வயிற்றில் சுமந்தாய்...

**ஆயுள் முழுவதும்

இதயத்தில் சுமக்கிறாய் - உன்

உதிரத்தை எனக்கு

உணவாக்கினாய்...

**கண்களால் காணும் தெய்வமே...

உன் அன்பிற்கு அளவுகோலா ?

படைப்பின் பரம்பொருளாம்

பிரம்மனுக்கும்

படைக்க முடியா கருவி...

**உனக்கும் எனக்கும்

ஆயுள்ரேகை ஒன்றாகாதோ ?

**ஈரேழு ஜென்மம் தரித்தாலும் - உனக்கே

மகளாக மாட்டேனோ???