மனம் என்ற
மூன்றெழுத்தை
உனக்குள் வை . . .
அமைதி என்ற மூன்றெழுத்து
உனக்கே உனக்கு...
தோல்வி என்ற
மூன்றெழுத்தை
தாங்கிப்பார்...
வெற்றி என்ற
மூன்றெழுத்து விரைந்திடும் . . .
காதல் என்ற
மூன்றெழுத்தில்
கலந்து
கல்வி என்ற
மூன்றெழுத்தை
மறவாமலிரு . . .
இத்தனையும் செய்துபார்
வெற்றி என்ற மூன்றெழுத்திற்கும்
மகிழ்ச்சி என்ற ஐந்தெழுத்திற்கும்
மத்தியில் - உன்
"வாழ்க்கை" என்ற நானகெழுத்து மணம் வீசிடும்...