Tuesday, April 15, 2008

நட்பா ? காதலா ?

நம் பால்ய
ஸ்நேகத்தில் . . .
இரசித்தனர்
ஒற்றுமையை

நாம் வளர்ந்தோம்
நம் நட்பும்...
அதற்குத்
தடையும்...

நண்பன் என்றேன்
நட்பாய் பழகுவதும்
காதலாய் கனிவதும்
இயல்பே ,
உரைத்தது சமூகம்
என் மனமோ
முரண்பட்டது - உனை
வினவினேன்
நீயோ
இருதலைக்கொள்ளியாய்
என் முன்...

மௌனம் கலைந்திடு
நட்பெனும் புனிதத்தோடு
காதலெனும் தூய்மையை
இணைத்து கொச்சப்படுத்தாமலிருக்க
நட்பா ? காதலா ?
முடிவெடு