அன்பெனும் காவியமே
பண்பெனும் புத்தகமே
பிரம்மன் தீட்டிய எழிலோவியமே...
நெருப்பின் காம்பில்
பூக்கள் பூத்திட
ஏந்திழையே
எழுந்திடு...
கைவளை விரலிடுக்கில்
சாதம் படைத்தது போதும்
சாதனை படைத்திடு...
இருளை அகற்ற
விவாதித்தது போதும்
விளக்கேற்று...
வஞ்சக வலையில்
கயல் சிக்கலாம்
கயல்விழியை ஒப்பவளே
நீயுமா ? ? ?
சரித்திரம் படைக்க
வந்தவளே
தரித்திரம் ஆகிவிடாதே...
தடைகளை தகர்த்தெறி ...
உனக்குள் இப்பிரபஞ்சத்தை
விதைத்துக்கொள்...
பிரபஞ்சத்தின்
கருவறையே...
நீ இல்லையேல் இப்பிரபஞ்சம் இல்லை.....