Tuesday, April 15, 2008

புதிதாய் பிறந்தோம் . . .

கருவறையாம் கருப்பையில்
துயில் கொண்டு
வையகம் கண்ட நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

அன்னை தந்தை
அறிந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

நட்பின் மகத்துவம்
காதலின் இலக்கணம்
அறிந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

புறஅழகை வெறுத்து
அகஅழகை
உணர்ந்த நொடியில்
புதிதாய்ப் பிறந்தோம்...

ஒவ்வொரு நாளும்
நொடியும் புதிதாய் பிறந்தோம்...

உன் ஆழ்சொப்பனமும்
உனக்கு ஓர் புதிய ஜனனமே . . .