Wednesday, April 16, 2008

இளைய தலைமுறையே திரண்டு வா...

மனம் கவர்ந்த
கன்னியருக்கும்
கண்ணன்களுக்கும்
ஏவுகணை செலுத்தி ஓய்ந்த
இளையதலைமுறையே...
வலுவிழந்த - உன்
பாரதத்தை
வலுவூட்ட . . .
இளையதலைமுறையே இணைந்து வா...

மின்மினி பூச்சிகளின்
மின்னல் வெளிச்சம்
நிலாப்பெண் வருகை
பதிவாகவில்லை...
ஆனால் ,
பௌர்ணமியாய் பிரகாசித்த ஓர் இடம்
அருகில் சென்றேன்
பாரத அன்னையைக்கண்டேன்...
சற்றே மெய் சிலிர்த்துப்போனேன்...

தாமரையாம்
அவள் கரங்களில்
வீரப்பால் . . .
விண்மீன்களாம்
அவள் விழிகளில்
ஏக்கம்...

அவள் காத்திருப்பது
அஹிம்சாவாதி காந்தி...
வீரமகள் ஜான்ஸிராணி...
குருதிகொட்டிய கட்டபொம்மனுக்காக
அல்ல...

அன்னையவள்
காத்திருப்பு
காக்கப்போகும்
இளையதலைமுறையே ...
உனக்காக...

பாரத வீதியில்
பாலும்
தேனும்
ஓடிட
ஒற்றுமை மலர்கள்
புன்னகைத்திட
இளையதலைமுறையே விரைந்து வா...

அன்னையவள் கண்ட கனவு
நெனவாக
இளையதலைமுறையே திரண்டு வா...