Wednesday, April 16, 2008

விடையின்றி வினா

நான் செல்லும்

வழிகளில் - என்

விழிகள் உனை

மட்டும் தேடுவது

ஏன் ? ? ?

எண்ணற்றவரோடு உரையாடுகிறேன்

உன் வார்த்தைகளுக்கு

மட்டும்

அர்த்தம் தேடுவது

ஏன் ? ? ?

உன் அருகாமையில்

வந்த நினைவுகளினும்

உன் பிரிவில்

அதன் எண்ணிக்கை உயர்ந்தது

ஏன் ? ? ?

விரும்புகிறேன் என்றவனின்

காதலை ஏற்கத் தயங்கிய

இதயம்

ஏன்...

காதலை சொல்லத் தயங்கிய

உனை நினைந்து

உருகுகிறது ? ? ?

பிரிவென்ற சொல்லுக்கு

பன்முறை செவிசாய்த்தருந்தும் - உன்

பிரிவில் மட்டும்

விழிகளுக்குள் வியர்வை

ஏன் ? ? ?