நான் செல்லும்
வழிகளில் - என்
விழிகள் உனை
மட்டும் தேடுவது
ஏன் ? ? ?
எண்ணற்றவரோடு உரையாடுகிறேன்
உன் வார்த்தைகளுக்கு
மட்டும்
அர்த்தம் தேடுவது
ஏன் ? ? ?
உன் அருகாமையில்
வந்த நினைவுகளினும்
உன் பிரிவில்
அதன் எண்ணிக்கை உயர்ந்தது
ஏன் ? ? ?
விரும்புகிறேன் என்றவனின்
காதலை ஏற்கத் தயங்கிய
இதயம்
ஏன்...
காதலை சொல்லத் தயங்கிய
உனை நினைந்து
உருகுகிறது ? ? ?
பிரிவென்ற சொல்லுக்கு
பன்முறை செவிசாய்த்தருந்தும் - உன்
பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை
ஏன் ? ? ?